நதியின் வேட்கை
குறிஞ்சி மண்ணில் களிப்புற்வே விண்ணிலிருந்து அதி
விரைவாய்ப் பயணித்து தன் மத்தகங்களை யசைத்து
குதூகலமிட்டு நடைபயிலும் களிறினங்களை பரவசப்
படுத்தி ஏனிந்தக் கருவினங்கள் அய்யன் காமத்துப்
பால் பருகவில்லையெனும் பூவினங்களின் ஏக்கத்தைப்
பரிகசித்து கரிசல் மண்ணை வளப்படுத்தி என்
பணிதனில் வெகுவாய் மகிழ்ந்திட்டேன் !
ஏற்றமிகு திருநாட்டில் தத்து முளைத்தது காண் !
சுற்றம் உடமையிழந்து நற்றமிழ் நன்மக்கள் புலம்
பெயர்ந்தனரே – என்று இத்தவ மண்ணில்
வசந்தம்
அரும்புமேயென ஏங்கிய நாட்கள் ஏராளம் ஏராளம்
எழில்மிகு உடைவிலா முகில் ஒளித்தது காண்
இடர்மறந்து தோள்சேர்ந்து ஒற்றுமையாய்
உவகையுடன் செயலாற்றிடுவீர் தரணிபாடும்
திருத்தலமாய் தமிழீழத்தை மாற்றிடுவீர்
வேட்கையுடன் நான் – பாலாவி
- பரிதிசெல்வன்
(பா.இரவிக்குமார்)